Thursday, March 01, 2012

விளையும் நிலங்கள்

image

சேற்றில் கால் வைக்கும் இவர்களால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடிகிறது

 

விளையும் நிலங்கள்
விளையவில்லை
விலைக்கு நீயும் வாங்கியதால்!!!
விடியும் என்று நினைத்திருந்தாய்
விடியாதவன் போல் ஆகிவிட்டாய்!!!
விளக்கம் சொன்னால் விளங்கவில்லை
விலங்காய் நீயும் மாறிவிட்டாய்!!!
விண்ணும் மண்ணும் பொதுவுடைமை
வீணாய் அலைந்து திரிகின்றாய்!!!
விபரம் அறிந்து செயல் பட்டால்
விரிந்த உலகம் உனக்காக
விலைக்கு நிலங்கள் எதற்க்காக!!!!!!!
விளை நிலங்கள் சும்மா இருப்பதும்
விலையில்லா தாய் பட்டினியால்
விடுவதும் ஒன்றே,,,,,,,,,,,,,,,,

Karthikeyan Kathirvelu

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.