தண்ணீர் பாட்டிலின் மர்ம எண்கள்!

வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம். Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம். இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை.

பழைய சோறு

தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. (ஆனால் இன்று நட்சத்திர ஹோட்டல்களில் மெனு கார்டில் முதலிடம் பழைய சோறு காரணம் கீழே முழுவதும் படிங்க..)

வாழை‌ப்பழ‌ம் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ப‌க்கவாத‌த்தை சுட்டுதல்லலாம்

தினசரி மூன்று கதலி வாழைப்பழங்களை (Banana)சாப்பிடுவதன் மூலம் பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்‌‌க்க முடியும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. காலை உணவுக்குப் பின் ஒன்றும், பகல் உணவுக்குப் பின் ஒன்றும் பின்னர் ......

அமெரிக்கர்களும் தோப்புக்கரணமும்

தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? இதனையே ஒரு தமிழன் கண்டு பிடித்து இந்த உண்மையை சொல்லி இருந்தால் எத்தனை தமிழர்கள் அவனை பைத்தியம்/ஏமாற்றுக்காரன் .....என கிண்டலடித்து இருப்பார்கள்!!!!

லஞ்சத்தை ஒழிக்க "இளைஞர் இயக்கம்' :அப்துல் கலாம்

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக உள்ள ஊழலை ஒழிக்க, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன...

புகை நமக்கு பகை, புகை பிடிக்காதீர்

ஒருசிகரெட்டைப் புகைத்தால் அவருக்கு மரணம் 5.5 நிமிடம் முன்னோக்கி வருகிறது, அதைவிட அருகில் உள்ளவர்களுக்கு 7 நிமிடம் முன்னோக்கி வருகிறது என யூனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது

This is default featured slide 3 title

www.saranjkp.blogspot.com

This is default featured slide 4 title

www.saranjkp.blogspot.com

This is default featured slide 5 title

www.saranjkp.blogspot.com

Thursday, July 28, 2011

எலுமிச்சை (தமிழ் மருத்துவம்)

imageவீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை.
சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து உப்போ, சர்க்கரையோ போட்டு கொஞ்சம் ஐஸ் கட்டிகளையும் போட்டால் சுவையான குளிர்பானம் தயார்.
இப்படி சட்டென நாம் தயாரிக்கும் எலுமிச்சைப் பழச்சாற்றில் எத்தனை நன்மைகள் உண்டு என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருப்பதில்லை.
எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி, ரிபோஃப்ளேவின், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீஷியம், புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட் என உடலுக்குத் தேவையான பல்வேறு மூலக்கூறுகள் உள்ளன. ஒரு எலுமிச்சைப் பழச்சாறில் 5 விழுக்காடு சிட்ரிக் அமிலம் உண்டு என்பது கவனிக்கத் தக்கது.
எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதனால் வரும் பலன்களில் சில இதோ…
1. எலுமிச்சைப் பழச்சாறை இளஞ் சூடான தண்ணீரில் கலந்து குடித்தால் வயிறுக்கு மிகவும் நல்லது. செரிமானப் பிரச்சினைகள், குமட்டல், வாந்தி போன்ற சிக்கல்களுக்கெல்லாம் எலுமிச்சைப் பழச்சாறு சரியான நிவாரணி.
2. எலுமிச்சைப் பழச்சாறு குருதி சுத்தீகரிப்பானாகவும் செயல்படுகிறது. அடிக்கடி எலுமிச்சைப் பழச்சாறை அருந்துவதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நச்சுப் பொருட்கள் வெளியாவதுடன் குருதியும் தூய்மையாகிறது.
3. எலுமிச்சைப் பழச்சாறை “லிவர் டானிக்” என்று அழைக்கிறார்கள் மருத்துவர்கள். ஈரலின் செயல்பாட்டை அதிகப்படுத்தி செரிமானத்தை ஆரோக்கியமாக்குவதற்கு எலுமிச்சைப் பழச்சாறு பெரிதும் துணை செய்கிறது.
4. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிக அளவில் உள்ளது. இதில் அபரிமிதமாக நிரம்பி வழியும் வைட்டமின் – சி உடலுக்கு பல்வேறு வகைகளில் பயனளிக்கிறது. தினமும் எலுமிச்சைப் பழச்சாறு அருந்துவது தோலைப் பளபளப்பாக்கி உடலுக்கு நல்ல மெருகை அளிக்கிறது. தோலிலுள்ள சுருக்கங்களை மாற்றவும், கரும் புள்ளிகளை மறையச் செய்யவும் எலுமிச்சைப் பழச்சாறு பயன்படும். மொத்தத்தில் மேனி அழகிற்கு தேவையான ஒரு இயற்கை உணவாகவும் இதைக் கொள்ளலாம்.
5. எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.
6. வாய் துற்நாற்றம் இருக்கிறதா ? பல்லிலும் ஊனிலும் சிக்கல்கள் இருக்கின்றனவா ? எலுமிச்சைப் பழச்சாறைக் கொண்டு மஸாஜ் செய்யுங்கள். பல்லுக்கும், பல் சார்ந்த இத்தகைய நோய்களுக்கும் எலுமிச்சைப் பழச்சாறு நல்ல மருந்து !
7. உடல் எடை இளைக்கவும் எலுமிச்சைப் பழச்சாறு துணை செய்கிறது. ஆச்சரியமாக இருக்கிறதா ? தினமும் காலையில் இளம் சூடான தண்ணீரில் எலுமிச்சைச் சாறையும், தேனையும் கலந்து அருந்தி வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
8. உயர் குருதி அழுத்தம் உடையவர்களுக்கு எலுமிச்சை பழச்சாறு மிகவும் நல்லது. உயர் குருதி அழுத்தம், தலை சுற்றல் போன்றவை நீங்க இதிலுள்ள பொட்டாசியம் சத்து உத்தரவாதம் அளிக்கிறது. மன அழுத்தத்தைக் கூட எலுமிச்சைப் பழச்சாறு குறைக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.
9. காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது.
10. மூட்டு வலி, உடல் தசைகளில் வலி போன்றவற்றுக்கு எலுமிச்சைப் பழச்சாறு மருந்தாகிறது. உடலிலுள்ள தேவையற்ற நச்சுத்தன்மை, பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றுவதன் மூலம் உடலுக்கு நலமளிக்கிறது எலுமிச்சைப் பழச்சாறு !
இத்தனை பயன்கள் கொண்ட எலுமிச்சை பழச்சாறை பழச்சாறை எப்படி அருந்தலாம் ? எவ்வளவு அருந்தலாம் ? எனும் குழப்பம் இருக்கிறதா ? மருத்துவர்களின் ஆலோசனையைப் பாருங்கள்.
எழுபது கிலோவுக்கு அதிகமான உடல் எடை கொண்டவர்கள் முழுமையான எலுமிச்சைப் பழத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் பிசைந்து உட்கொள்ளலாம். தினமும் இரண்டு முறை உட்கொள்வது பயனளிக்கும். குறிப்பாக காலையில் குடிப்பது சாலச் சிறந்தது. எழுபது கிலோவுக்குக் குறைவான எடை கொண்டவர்களுக்கு அரை எலுமிச்சைச் சாறே போதுமானது

Wednesday, July 27, 2011

ஆரஞ்சுப் பழம்(தமிழ் மருத்துவம்)

imageஎன்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத்தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.
இன்றைய மாணவ சமுதாயத்திற்கு கல்விச் சாலைகள் சிறைச்சாலைகளாக உள்ளன. பாடத்திட்டம் அனைத்தும் மூளை சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே இல்லை. மேலும் வீட்டிற்கு வரும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி சிறப்பு வகுப்புக்கு அனுப்புகிறார்கள். இதுபோல் விடுமுறை நாட்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே கழிந்துவிடுகின்றன. அடுத்த தெருவிற்கு செல்லவேண்டும் என்றாலும் வாகனத்தில்தான் செல்கிறோம். நடை என்பது பலருக்கு நோயின் தாக்கத்திற்குப் பிறகுதான் தெரியவரும்.
இப்படி சத்தற்ற உணவும், உடற்பயிற்சி யின்மையும் ஒரு மனிதனை முதுமையின் வாசலுக்கு எளிதில் அழைத்துச் செல்லும்.
உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.
எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறிந்துகொள்வோம்.
சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.
இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்துவிடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.
ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.
ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும். இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உண-வில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.
ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.
நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.
ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.
ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்
நெஞ்சுவலி, இருதய நோய்கள், எலும்பு மெலிவு நோய்களையும் இதிலுள்ள சுண்ணாம்புச் சத்து குணப்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆரஞ்சுப்பழம் கொடுத்து வந்தால் வாந்தி குணமாகும்.
ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.
என்றும் இளமையுடன் வாழ ஆரஞ்சுப் பழச்சாறு மிகவும் அவசியம்.

Saturday, July 23, 2011

வெந்தயம்/வெண்தயம் ( Fenugreek )(தமிழ் மருத்துவம்)

imageவெந்தயம்/வெண்தயம் ( Fenugreek ) - ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும்.
௧)பாலூட்டும் தாய்மாரின் பாற்சுரப்பைக் அதிகரிக்கும்
௨)காலையில் சிறிதளவு வெந்தயமும் தண்ணீரும் குடித்துவந்தால் பல குடல் தொடர்பான நோய்கள் அணுகாது
௩)கரண்டி [ 100 கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன்னிறத்தில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து , பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
௪)கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு ,[50 கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால் இரண்டும் நன்கு பொரிந்துவிடும். அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு போத்தலில் போட்டு வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு பயன்படும்.
௫)வயிறு உப்புசமாகவோ ,பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [ ௪] வகை பொடியை 1 கரண்டி +கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க உடனே சரியாகும்.
௬)தினமும் காலையில் [ ௩] வகை பொடியை மோரிலோ , தண்ணீரிலோ கலந்து குடிக்க குருதியிலுள்ள சீனி கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில் குடிக்கணும்.
௭)பேதி போகும்போது மோரில் [ ௩] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.
௮)முட்டு வலி இருப்பவர்கள் [சீனி இல்லாதவர்கள்] 1 கரண்டி [ ௩ ] வகை பொடி + சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
௯) சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான் அடிக்கடி கழிப்பறை போக தோன்றும். ( சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [ ௩ வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 குவளை நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா செய்யாது. கிளம்பும் சமயம் சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல் எடுத்து செல்லவும்.
௧௦) குருதியிலுள்ள சீனி + இரத்த அழுத்தம் குறைய , முழு வெந்தயம்- கரண்டி , பாசிபயறு- 2 கரண்டி , கோதுமை- 2 கரண்டி , இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி , மறுநாள் காலை மிளகு- 2, சிறிது கல் உப்பு , கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து , காலையில் வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்] காலை உணவாக சாப்பிட்டால் இரத்த அழுத்தம் , சீனி நன்றாக குறையும் , ருசிக்கும் குறைவில்லை.
௧௧) வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில் கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சீனி உள்ளவர்களுக்கு நல்லது.
௧௨)வெந்தய கீரையை சுத்தம் செய்து நறுக்கி , மிளகாய்பொடி , மஞ்சள்பொடி , பெருங்காயதூள் , உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில் போட்டு கலந்து நீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளி சட்னி , வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி சூப்பர். ( வெந்தய கீரையை சுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம். அதன் பலன்களுக்கு தனி புத்தகமே போடலாம்)
எந்த வகை ஊறுகாய்க்கும் [ ௪ வகை] பொடி சேர்க்கவும்.
௧௩)குவளை இட்லி அரிசி , 1/2 குவளை வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறிய பின் அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்னிறத்தில் இருக்கும். வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.
௧௪)குவளை புழுங்கல் அரிசியுடன் ,1/2 குவளை உளுந்ந்து , 1/2 குவளை வெந்தயம் இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்ல பூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித சட்னியும் சுவையாக இருக்கும். நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம். எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- கரண்டிவெந்தயம் ஊற வைப்பதும் நல்லது.
௧௫) தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல் உப்பு கலந்து ]ஊற வைத்து சாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 கரண்டிவெந்தயத்தை தண்ணியுடன் விழுங்கினால் , உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சீனி உள்ளவர்களும் சாப்பிடலாம். சீனி குறையும்.
௧௭)முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள் காலை அரைத்து , தலையில் வைத்து ஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது

Friday, July 22, 2011

வெங்காயம்–Onion(தமிழ் மருத்துவம்)

வெங்காயம் – Onion

வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி onionவந்திருக்கின்றனர். தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர். அரேபியர்கள் ஏராளமான வெங்காயத்தை உட்கொள்கிறார்கள். இன்றும் கப்ஸாவோடு வெங்காயம் இருக்கத் தவறுவதில்லை. நேபாளத்தில் வெங்காயம் கடவுளுக்கு நிவேதனம் செய்யவதாகச் சொல்கிறார்கள். யூதர்கள் முற்காலத்திலேயே பயன்படுத்தி இருக்கின்றனர். அல்குர்ஆனில் (2:261) வெங்காயமும் சொல்லப்பட்டுள்ளது. மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்ஸ் வெங்காயத்தின் பயனைப் பற்றிக் கூறியுள்ளார். அமெரிக்கரும், இங்கிலாந்து நாட்டவரும் சிறந்த நோய் தீர்க்கும் ஒன்றாக வெங்காயத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் 'அலைல் புரோப்பைல் டைசல்பைடு' (Allyle Propyle Disulphide) என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத் தான் தருகின்றன.
வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே, நம் உடம்புக்கு ஊட்டச்சத்து தருகிறது. பல்வேறு நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் பிரதான இடத்தை வகிக்கின்றது. பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள், வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயம் பல்வேறு நோய்களை குணமாக்க வல்லது. இதய சக்தியைத் தருகிறது. நரை, தலை வழுக்கையைத் தடுக்கும். உடல் வெம்மையைத் தணிக்கும். இரத்த விருத்தி, எலும்புக்கு வலிமை அளிக்கிறது. பித்த நோய்கள், கண் நோய்கள், வாத நோய்களை குணமாக்குகிறது.
இனி... வெங்காயத்தை எந்தெந்த முறையில் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை
நாம் பெறலாம் என்பது பற்றிப் பார்ப்போம்.
வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

Wednesday, July 06, 2011

கைத் தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தில் எழுத முடியுமா? இதோ ஒரு வழி

கைத் தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தில் எழுத முடியுமா? இதோ ஒரு வழி - முயற்சி செய்து பாருங்கள்.

image

TAMIL SOFTWARE COLLECTION

Could You update in TAMIL from your Mobile ? உங்கள் கைத் தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தில் எழுத முடியுமா? இதோ ஒரு வழி - முயற்சி செய்து பாருங்கள். உங்கள் கைத்தொலைபேசியின் ( browser Eg: miniOpera) உலாவியில் http://scriptconv.googlelabs.com/ இந்த இணையத்தள முகவரிக்கு ( Address) சென்று தமிழ் உச்சரிப்பை அவ்வாறே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யவும் (Please type in English as you pronounce words in Tamil. பின்னர் தமிழிற்கு மாற்றவும்( Convert it to Tamil). அதன் பின்னர் அதனை பிரதி (Copy) செய்து வேண்டிய இடத்தில் ஒட்டுங்கள் (paste .
Are you unable to view Tamil web pages / Tamil Unicode Fonts in your Mobiles? Follow these Steps...
உங்கள் கைத்தொலைபேசியில் தமிழ் ஒருங்குறியிலமைந்த இணையப் பக்கங்களை பார்வையிட முடியவில்லையா? கவலையை விடுங்கள். இப்பொழுதே ஒபேரா மினி உலாவியை (mini Opera Browser from
http://www.opera.com/mobile/ )பதிவிறக்கம் செய்து உங்கள் கைத் தொலைபேசியில் நிறுவிக் கொள்ளுங்கள்.இப்பொழுது உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.
இன்னும் உங்களால் தமிழ் இணையப் பக்கங்களை பார்க்க முடியவில்லையாயின் ஒபேரா உலாவியின் செட்டிங் பகுதியில் பின்வரும் மாற்றங்களை செய்யவும்.
Now
# click "settings"
# Now change the "Font size" as "large"
# Then check the "Mobile view"box"
# Then "Save"the settings.
Now again
Type "about:config" in the "address bar"
# Then "go to" config page.It will open a page named "Power User settings"
# go to the bottom of the "Power user setting" page.
# you will see option named "use bitmap fonts for complex scripts"
# Check "Yes" for "Use bitmap fonts for complex scripts"
# Then "Save" the setting.
இப்பொழுது உங்களால் நிச்சயமாக தமிழ் இணையப் பக்கங்களை கைத்தொலைபேசியில் பார்க்க முடியும்.
http://www.facebook.com/note.php?note_id=10150102378134710&id=141482842472
https://www.facebook.com/note.php?saved&&note_id=10150162298879710&id=141482842472
http://www.muththumani.com/2009/12/blog-post_8306.html

தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும்/ தமிழில் எழுத முடியாத தமிழர்களால் தமிழ் அழிந்துவிடும் என்றே அஞ்சுகிறோம். தமிழனால் தமிழில் எழுதவோ பேசவோ முடியவில்லை என்றால் எவன் தமிழை எழுதுவான்/ பேசுவான்?????? தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதித் தமிழைக் கொலை செய்ய வேண்டாம்.தயவுசெய்து தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழில் எழுத மென்பொருட்கள்-> http://www.facebook.com/media/set/?set=a.10150173484532473.293547.141482842472 அல்லது http://www.facebook.com/note.php?note_id=127514014709

By: தமிழ் - Tamil

Monday, July 04, 2011

இந்த ஓவியங்கள், நிலவு ரசிப்பதற்கு!

Jim Denevan (ஜிம் டெனேவன்) எனும் நிலவியல் ஓவியர், கலிபோர்னிய கடற்கரையில் வரைந்துள்ள வரைபடங்கள் இவை.
அவருக்கு நிச்சயம் தெரியும். இவை நீண்ட நேரம் நிலைத்திருக்காது (Impermanent) என்பது.

ஏ4 கடதாசியில் ஒரு போட்ரெய்ட் ஓவியத்தை மூன்று மணிநேரம் பொறுமையாக இருந்து வரைந்து முடிக்க எம்மில் எத்தனை பேருக்கு முடியும்?

சிறிய குச்சிகள், தடிகளை கொண்டு பல மைல் நீளத்திற்கு இந்த ஓவியங்களை வரைவதற்கு அவருக்கு பல மணி நேரம் தேவைப்படுகிறது. ஆனால் இரு தடவைகள் கடல் அலை, கரை தாண்டி படையெடுத்தால், ஓவியம் கடலுடன் கரைந்துவிடும். அப்படி எனில் யாருக்காக இந்த ஓவியங்களை வரைகிறார்? நிலவு  ரசிக்கட்டும் என்கிறார் புன்முறுவலுடன்..!
ஓவியம் நீண்ட நேரம் கடற்கரை மண்ணில் நிலைக்காவிடினும், இவருக்கு ரோயல் சல்யூட் அடிக்கிறார்கள் இதை பார்வையிடுவதற்காகவே இங்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்! ஏன்?
'Think Out Of The Box!!'

Saturday, July 02, 2011

உலகின் மிக நீளமான கடல் பாலம் : சீனாவில் திறக்கப்பட்டது! (படங்கள்)

உலகின் மிக நீளமான கடற் பாலம் சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் குயிங்டோ - குவாங்டோ நகர் இடையே மூன்று முனைகளிருந்து இணையும் இப்பாலம், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் சீன பொறியியலாளர்களால் கட்டப்பட்டு வந்தது.

6 வழிச்சாலை கொண்ட இப்பாலத்தின் மொத்த நீளம் 42.4 கி.மீட்டர் ஆகும். மொத்தம் 5,2000 தூண்கள் கடலிருந்து எழுப்பட்டு அதன் மேல் இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.

முன்னதாக அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ள லேக் பான்செண்ட்ரைன் காஸ்வே பாலமே உலகின் மிக நீளமான (37.7கி.மீ) கடல் பாலமாக

சாதனை படைத்திருந்தது.
தற்போது அந்த சாதனையை உடைத்து, சீனா தங்களது கட்டுமான திறனை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. இப்பாலத்தின் மீது நாளாந்தம் 30,000 க்கும் அதிகளவான கார்கள் சென்றுவரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Jiaozhou Bay பாலம் என அழைக்கப்படும் இப்பாலத்தை கட்டிமுடிக்க 1 பில்லியன் யூரோ செலவாகியுள்ளது. இப்பாலம் லண்டனில் உள்ள Tower Bridge ஐ போன்று 174 மடங்கு நீளம் கூடியது.
இது கடந்த டிசெம்பர் 22ம் திகதி முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட பின்னர் இதன் தலைமை பொறியியலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், கணணியின் கல்குலேஷன் எல்லாம் சரியாக தான் இருக்கிறது.

ஆனால் இரு கரைகளிலிருந்தும் வளர்ச்சி அடையும் பாலம் நடுவில் சரியான மையத்தில் ஒன்று சேர்கிறதா என்ற பயம் கடைசிவரை இருந்தது என தெரிவித்தனர்.

இனி இந்த பாலம் தான் உலகின் மிக நீளமான பாலமாக இருக்க போகிறது எனும் தகவல் இன்னும் சில காலத்துக்கே செல்லுபடி ஆகும். இன்னமும் பத்து வருடங்களுக்குள் இந்த சாதனையை முறியடித்து புதிய கடல் பாலமொன்றை சீனாவின் குவாந்த்தோங் - ஹொங்காங், மாச்சோவ் பகுதிகளை இணைத்து கட்டுகிறது சீனா. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக கடந்த டிசெம்பர் மாதம் அறிவித்திருந்தது.
2016 இற்குள் கட்டி முடிக்கப்படவிருக்கும் இப்பாலம் 30 மைல் நீளமானது. 8.0 மேக்னிடூட் நில அதிர்வையும், கடும் தைபூன் சூறாவளியையும் கூட தாங்கும் விதத்தில் இப்பாலம் அமைக்கப்படவிருக்கிறது.
உலகின் மிக நீளமான பெருந்தெருக்கள் பாலமும் சீனாவில் தான் கட்டப்பட்டுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது. Dayang Kunshan எனும் இப்பாலம் ரயில்வே போக்குவரத்துக்கென அமைக்கப்பட்டது. இதன் நீளம் 80 கி.மீ என்பது குறிப்பிடத்தகக்து.